செவ்வாய், 3 நவம்பர், 2009

மக்கள் குரல் - நவம்பர் 3, 2009

திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...

***************************************************************************

திரு.மன்மோகன் சிங்: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் , தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகி விடுகிறது.”

மக்கள்: ஒண்ணும் புரியலையே!!!!! இவரே அவங்களுக்கு எடுத்து கொடுக்குறாப்புல இருக்கு...

****************************************************************************

திரு.தங்கபாலு: ”இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் ராஜபக்‌ஷேவிடமோ அல்லது அங்குள்ள எந்த தலைவர்களிடமோ எந்தப் பரிசுப் பொருட்களையும் பெறவில்லை!”

மக்கள்: இது வேறயா??? ஆனா ’இல்ல, இல்ல’ அப்டிங்குற போதெல்லாம் ’இருக்கு, இருக்கு’ அப்டின்னு காதுல விழுகுதே!!!’

*****************************************************************************

திரு.மு.க.ஸ்டாலின்: “வயதான காலத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்குப் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்!”

மக்கள்: நீங்க தான் அதுக்கு வாழும் உதாரணமா திகழ்றீங்களே!!!!

******************************************************************************

திரு.கருணாநிதி: “இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கிறது”

மக்கள்: தமிழ் மக்கள் எல்லாரும் செத்த பிறகு எங்க இருந்து சண்ட போடுறது. சண்டை நின்ற புண்ணியம் உங்களை சேருமைய்யா...

******************************************************************************

செல்வி.ஜெயலலிதா: “ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது”

மக்கள்: என்ன அ.தி.மு.க தொண்டர்கள் யாரும், ‘உலக அளவில் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’ அப்டின்னு தீர்மானமும் நிறைவேற்றல, கோரிக்கையும் வைக்கல.. ஒரே மர்மமா இருக்கே!!!

Leia Mais…

ஞாயிறு, 1 நவம்பர், 2009

ஒரு ரூபாயில் விளையும் பயன்

தி.மு.க அரசு தன்னுடைய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் தமிழகத்தை வெகு சீக்கிரமே சோதனையில் தான் கொண்டு சென்று விடும் போலிருக்கிறது. ஏற்கனவே நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியின் தரத்தின் பெயரில் பல குற்றசாட்டுக்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அதை வாங்கி உண்பது தங்களுடைய வறுமையின் காரணமாகவே என்று நம்பியிருந்த நான், அந்த காரணத்தை குழி தோண்டி புதைக்கும் படி ஆகிவிட்டது.

சென்ற வாரம் எனது அலுவலக நண்பரோடு பேசி கொண்டிருந்த போது அவரது ஜவுளி கடை வைத்திருக்கும் அவரது நண்பரைப் பற்றி சொன்னார். அதாவது அவர் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அதற்கு ஒரு யோசனை சொல்லும் மாறு அவரின் நண்பரிடம் கேட்ட போது, உடனே மறுத்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்:

இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு

அப்டி-னு சொல்லி இருக்கார்.

இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க.

நம்ம அரசு ஏதோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றோம்-னு பெருசா சொல்லிக்கிறாங்க. ஆனா அதுல இருக்குற பாதகங்களா பாக்காம விட்டுவிட்டு இருக்காங்க. இதோட உடனடி பாதிப்பு இப்போ தெரியலனாலும், இப்படியே போச்சுன்னா, இன்னும் சில ஆண்டுகள்-ல நிச்சயமா தொழில் துறை-ல பாதிப்பு இருக்கும்.

ஏற்கனவே விவசாயம் நம்ம நாட்டுல நசிஞ்சு போயிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த யாருமே இப்போ விவசாயம் பாக்கல. நிலத்த வச்சி இருந்தவங்களும் நிலத்த வித்துட்டு வேற வேலைய பாக்க போயிட்டாங்க. விவசாயம் பாக்குறது அப்டிங்குறதே ஒரு கேவலமான விஷயம் மாறி இப்போ ஆயிடுச்சி. ஆனா இத சரி பண்றதுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அரசாங்கமும் எடுக்கல. இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம போனாலும் போகலாம்.

இலவசங்கள் மக்கள வெறும் சோம்பேறிகளாக தான் ஆக்கும் என்ற எளிய உண்மையை எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.

Leia Mais…

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மதியின் மதிநுட்பம் - I

நான் முன்பே சொன்னது போல திரு.மதி அவர்கள் வரைந்த, அதில் நான் ரசித்த கார்ட்டூன்களை பதிவாக போடுகிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். மதி அவர்களின் ஸ்பெஷாலிடி என்னவெனில், நாம் நினைப்பதை ஒரு நகைச்சுவையாக, நக்கலாக சொல்வது. சரி என்சாய் பண்ணுங்க.

பின்வருவன அவர் 2006-ம் ஆண்டு அப்போது வெளியான படங்களை அடிப்படையாக கொண்டு வரைந்தது.

பின்வருவன அவரது சமீபத்திய கார்ட்டூன்கள்:

மற்றொரு பதிவில் அவரது இன்னும் சில சமீபத்திய மற்றும் கிளாசிக் கார்ட்டூன்களை பகிர்ந்து கொள்கிறேன்.

Leia Mais…

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

எனக்கு விருது கொடுத்து இருக்காங்க

ரம்யா அக்கா எனக்கு விருது கொடுத்து இருக்காங்க. 'SCRUMPTIOUS BLOG AWARD'. ரொம்ப நன்றி அக்கா.

தமிழ் வலையுலகத்தை பொறுத்தவரை நான் ரொம்ப புதியவன்(இங்கலிஷ்-ல மட்டும் பெரிய ஆளா-னு கேக்காதீங்க... அங்க தான் நான் என்னோட வலையுலக பயணத்த தொடங்குனேன். இங்கைய விட கொஞ்சம் அதிகம் பதிவுகளையும் எழுதி இருக்கேன்). எனக்கு இந்த விருது கிடச்சதுல ரொம்ப சந்தோஷம்.

இத நான் அடுத்து வர நண்பர்கள் எல்லோருக்கும் கொடுக்க ஆசைப்படுறேன்.

ஜமால் அண்ணா,
விஜய் அண்ணா,
G3 அக்கா,
கில்ஸ் அண்ணா,
சக்தி அக்கா,
ரமேஷ் அண்ணா,
கா.கி அண்ணா,
பாலா அண்ணா,

எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்

Leia Mais…

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஆதவன் - விமர்சனம்

தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் வந்த படம். சூர்யா-கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி. இருவருமே கடைசி இரண்டு மூன்று ஆண்டுகளில் வெற்றியை மட்டுமே சுவைத்து இருப்பதால் எதிர்பார்ப்பை மிகவும் அதிகப்படுத்தியது. ட்ரெயிலரும் பாடல்களும் நன்றாக இருக்க, நாம் எதிர்பார்த்தது நல்ல படத்தை. கொடுத்து இருக்கிறார்களா என்று பார்ப்போம்.
கதை:

கூலிக்கு கொலை செய்பவராக சூர்யா. அவரின் குடும்பத்திற்கே அது தான் தொழில். குழந்தைகளை கொன்று அவர்களது உடல் உறுப்புகளை விற்கும் குழுவின் தலைவன், அந்த வழக்கை விசாரிக்க வரும் அதிகாரியை கொல்ல சொல்லி சூர்யாவின் குழுவிற்கு சொல்கிறார். அந்த அதிகாரியை கொல்வதற்காக அவரின் வீட்டிற்கே சென்று வேலை செய்ய வந்தது போல நடிக்கிறார். அடுத்து அவரது திடுக்கிடும்(!?!?!?!) பின்னனிகள் ப்ளாஷ்பேக்குகளாக விரிய படத்தை வழக்கம் போல சுபமாக முடிக்கிறார் இயக்குனர்.

முதல் பாதி பெரிய குடும்பம், வடிவேலு-சூர்யா கூட்டணி நகைச்சுவை என கொஞ்சம் வேகமாக நகருகிறது. அது எப்படி கொஞ்சம் வேகமாக நகரலாம் என்று ஆங்காங்கு வேகத்தடைகளாக பாடல்கள். இரண்டாவது பாதி முழுக்க நாம் பல படங்களில் பார்த்த செண்டிமெண்ட் காட்சிகள். என்ன அழுகைக்கு பதில் சிரிப்பு தான் வருகிறது. லாஜிக் அப்டிங்குறவங்களுக்கெல்லாம் ஒரே பதில் தான்... இது கே.எஸ்.ஆர் படம். அதுக்கு மேலயும் லாஜிக்க நீங்க தேடுனா... சாரி பாஸ் என்பது தான் பதில்.

ரமேஷ் கண்ணா இன்னும் கூட இந்த கதைய தேத்தி இருக்கலாம்..

நடிப்பு:

சூர்யா உண்மையான ஒரு ஹீரோவா இதுல நடிச்சு இருக்கார். அதாவது இந்த பல கட்டடங்கள்-ல இருந்து ஜம்ப் பண்றது. அப்பாவும் காதலியும் மாட்டிக்கும் போது குண்டடிய தான் வாங்கி காப்பாத்துறது மட்டும் இல்லாம வில்லனுக்கு அத அப்டியே திருப்பி கொடுக்குறது... அப்பப்பா... இவர் மட்டும் தான் இத செய்யாம இருந்தார். அவரையும் மாத்திட்டாங்க. அடேங்கப்பா என்றேல்லாம் சொல்ல வைக்கும் அளவுக்கு நடிக்க எதுவும் இல்லை. சும்மா வந்து போறார். அந்த 10 வயசு சூர்யா எல்லாம் பார்க்க ஆச்சர்யத்த விட சிரிப்பு தான் வருது. தேவையற்ற செலவு. நயந்தாரா.. பல படங்கள் கழித்து இந்த படத்தில் சிறிது ரசிக்கும்படி இருக்கிறார். சிறிது நடிக்கவும் செய்து இருக்கிறார்.

நகைச்சுவைக்கு வடிவேலு. பல படங்களுக்கு பிறகு ‘வெடி’வேலுவாக மாறி நம்மை சிரிக்க வைக்கிறார். முதல் பாதி நகருவதே இவரால் தான். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் சரோஜா தேவியும், ஆனந்த் பாபுவும். சரோஜா தேவி அவர்களின் அந்த கொஞ்சி பேசும் நடிப்பை தாங்க முடியல... கொல்றாங்க. ஆனந்த்பாபுவ அவர் தான் நடிச்சு இருக்கார்-னு கன்ஃபார்ம் பண்ண்வே கொஞ்ச நேரம் ஆயிடுச்சு. ரொம்ப தான் ஆள் நோடிஞ்சு போய் இருக்கார். ரமேஷ் கண்ணாக்கு ஒரு வேத்து வேடம். மியூசிக் பைத்தியம்-னு சொல்லிட்டு நம்மள பைத்தியம் ஆக்குறாரு. வில்லன்கள் எல்லாம் அவங்க வேலையான வாய் சவடல்கள நல்லாவே கொடுத்து இருக்காங்க.

இசை:

ஹாரிஸ் ஜெயராஜ் தன்னோட வழக்கமான பாணியில இசையமைச்சிருக்கார். ‘ஹசிலி பிசிலி’யும், ‘வாராயோ வாராயோ’ பாடலும் என் பேவரிட். அதுவும் ‘வாராயோ வாராயோ’ பாடல் வர இடமும் சரி, அதன் கான்சப்ட், அதை படமாக்கிய விதம்.. மிக அருமை. எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் பின்னனி இசையில் மனிதருக்கு சல்ப்பேடுக்கவில்லை. ஒரே இரைச்சல் தான்.

ஒளிப்பதிவு:

ஆர்.ஏ.கணேஷ். நல்லா பண்ணியிருக்காரு. பாடல் காட்சிகள் பார்ப்பதற்கு குளுமை. ஆக்‌ஷன் காட்டிகளில் வேகமாக பயணிக்கிறார். ஆனால் வீட்டிற்குள் எடுத்த காட்சிகள் சிலவற்றில் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்.

எடிட்டிங்:

டான் மாக்ஸ். இந்த படம் ஏன் 3 மணி நேரம் ஒடுகிறது என்ற காரணம் எனக்கு இன்னும் பிடிபடவில்லை. பல காட்சிகளை வெட்டி எறிந்து படம் பார்ப்பவர்களின் துன்பத்தை சிறிது குறைத்து இருக்கலாம். சொர்க்கத்துக்கு போக வேண்டிய நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாரு-னு தான் சொல்லணும்.

இயக்கம்:

கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் இருந்து நான் கலைப்படைப்பெல்லாம் எதிர்ப்பார்க்கவில்லை. மசாலா படம் சிறு புதுமைகளோடு... அவ்வளவே. மசாலா படத்தை மீண்டும் தந்து இருக்கும் இவர் அந்த சிறு புதுமையை மறந்துவிட்டார். இரண்டாவது பாதி முழுக்க பல படங்களின் கதை மற்றும் காட்சிகளின் நெடி.

ஆதவன் - சூர்யா, கே.எஸ்.ரவிக்குமார் கணக்கில் மற்றோரு படம்.

Leia Mais…