கடைசியா நடந்த பதிவர் சந்திப்பின் போது கேபிள் அண்ணா இந்த படம் சூப்பரா வந்திருக்குனு சொன்னார். அதனால எல்லாரும் புதுமுகங்களா இருந்தாலும் கொஞ்சம் எதிர்ப்பார்ப்போட தான் போனேன்.
நடிப்பு: ஹீரோ அப்டின்னுயெல்லாம் இந்த படத்துல யாரும் இல்ல. சக்தியா வர ஜானி அப்புறம் அவன் ஜெயில்ல சந்திக்கிற நாலு பேரு(டப்பா, பாண்டு, மைக்கேல், மாரி) எல்லாருமே கிட்டதிட்ட ஒரே அளவு தான். இதுல டப்பாவுக்கும் ஜானிக்கும் நடிக்க நல்ல வாய்ப்பு. பயன்படுத்திகிட்டு இருக்காங்க. ஜானி ஆரம்பத்துல அம்மா அப்பா கிட்ட இருக்கும் போது ஒரு மாதிரியான நடிப்பையும், காதல் காட்சியில கொஞ்சம் வித்தியாசமாவும், இறுதிகாட்சி-ல எல்லாத்துக்கும் சேர்த்து அனல் பறக்குற ஒரு நடிப்ப வழங்கி இருக்காரு.
ஹீரோயினா வர்ற பொண்ணு ரொம்ப க்யூட்டா அழகா நடிச்சிருக்கு. அதே மாதிரி கண்ணாடி போட்டுட்டு வர்ற பொண்ணும். ஹீரோயினோட அக்கா மாமாவா வர்றவங்களும் நல்லா நடிச்சு இருக்காங்க.
ஒளிப்பதிவு & எடிட்டிங்:
படத்தோட இரு தூண்கள். படத்தின் தடாலடி வேகத்திற்கு ஏற்றவாறு சக்தி படம் பிடித்து கொடுத்தால் அதை அழகாக விறுவிறுப்பு குறையாமல் வெட்டி இருக்கிறார் ஆண்டணி. எந்த ஒரு காட்சியையுமே குறைசொல்ல முடியா வண்ணம் சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அந்த சிறிய சந்துகளில் சென்று அழகாக படம் பிடிப்பதாகட்டும், ஆக்ஷன் காட்சிகளில் அனல் பறப்பதாகட்டும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இசை:
எல்லா பாட்டையுமே முதல் வாட்டியா படத்துல தான் கேட்டேன். அதனால எதுவும் இப்போ நினைவுல இல்ல. பின்னனி இசை ஒ.கே. இன்னும் கொஞ்சம் நல்லா செஞ்சு இருக்கலாம்-னு தோணுச்சு.
இயக்கம்:
பன்னீர்செல்வம். புதுமுக இயக்குநராம். சொன்னால் தான் தெரியுங்குற அளவுக்கு படம் முழுக்க பெர்பெக்ஷன். கத்தி எடுத்தவன் கத்தியால தான் சாவான் அப்டிங்குற பழமொழிக்கு எடுத்துகாட்டா அடுக்கடுக்கா வந்துட்டு இருக்குற படங்கள்-ல இதுவும் ஒண்ணு-னு நெனச்சா, கூட்டத்துல இருந்து இந்த படத்த தனிச்சு காட்டுறது இந்த படத்தோட மேக்கிங். பிரிச்சு இருக்கார். படம் முழுக்க அவரோட உழைப்பு தெரியுது. புதுமுகங்கள் கிட்ட இருந்து நடிப்ப வாங்கி இருக்குறதுலயே அவரோட திறமை தெரியுது.
பல விஷயங்கள் நல்லா செஞ்ச அவர் ஸ்கிரிப்ட்லயும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் பல படங்கள் சென்ற பாதையிலேயே போகுது. இடங்கள் மட்டும் வேற. கிளைமாக்ஸையும் யூகிக்க முடிஞ்சிடுது. மத்தபடி டிஸ்டிங்க்ஷன் -ல தேறுவார்.
ரேனிகுண்டா - பழைய மசாலா, புது ருசி.
ஞாயிறு, 6 டிசம்பர், 2009
ரேனிகுண்டா - விமர்சனம்
ஞாயிறு, 29 நவம்பர், 2009
யோகி - விமர்சனம்

கதை:
இந்த கொலை கொள்ளை சம்பவங்கள் எல்லை மீறி போவதால் அந்த ஏரியாவின் பெரிய தாதாவான திருநா-வை போலீஸ் அணுகுகிறது. மறுபுறம் குழந்தையை காணவில்லை என அதன் அம்மா பரிதவிக்க அவளது கணவனோ அதை எப்ப்டியாவது கொன்றுவிட திட்டமிடுகிறான். அதன் பிறகு, யோகி பிடிப்பட்டானா, குழந்தை தாயுடன் இணைந்ததா என்று கிளைமாக்ஸில் காட்டுகிறார்கள்.
நடிப்பு:
அமீர் ஹீரோவாக நடிக்கும் முதல் படம். முகத்தை சீரியாஸாக வைத்து கொண்டு அவ்வப்போது அதே டோனிலியே அனைத்து வசனங்களையும் உச்சரிக்கும் ரெளடி வேடம். உடம்பையெல்லாம் முறுக்கேற்றி கொஞ்சம் நன்றாகவே செய்திருக்கிறார். கிளைமாக்ஸில் சிறிது கத்துகிறார். அப்போது அவரையும் மீறி சசிக்குமார் தான் எனக்கு வெளிப்பட்டார். ஊர்ல எல்லாரும் அப்டி தான் போல. அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கேரக்டர் அந்த குழந்தை தான். அழகாக இருந்தது. சில போலீஸ்கள், பல ரெளடிகள் தங்களது பணிகளை செவ்வனே செய்கின்றனர்.
கதாநாயகி மதுமிதாவிற்கு கொஞ்சம் வித்தியாசமான வேடம். வழக்கம் போல நன்றாகவே செய்து இருக்கிறார். அமீரை பார்த்து பயப்படும் போதும் சரி, பின்பு புரிந்து கொண்டு அன்பாக நடந்து கொள்ளும் போதும் நல்ல வித்தியாசத்தை காட்டி இருக்கிறார்.
ப்ளாஷ்பேக்கில் வரும் யோகியின் அப்பாவின் நடிப்பும் அபாரம். அவர் அவர் குடும்பத்தில் இருக்கிம் ஒவ்வொருவரையும் அடிக்கும் போதும் ஏதோ நம்மயே அடித்து வெளுப்பதை போல் உள்ளது. ஒரு வெறுப்பு ஏற்படுகிறது அவர் மேல். அதனால் அவர் பெற்றது வெற்றியே.
இசை:
யுவனின் இசையில் பாடல்களை கேட்டேன். ஆனால் பெரிய அளவில் என்னை ஈர்க்கவில்லை. ‘சீர் மேவும் கூவத்திலே’ மட்டும் ஒகே-வான ஒரு நம்பர். பின்னனி இசை நன்றாக இருந்தது. ஆனால் தொடர்ந்து ஒரே இசை தான் பின்புலத்தில் ஒலித்து கொண்டிருந்தது. சண்டை காட்சிகளில் அதிரடியாக இருந்தது.
ஒளிப்பதிவு:
ஆர்.பி.குருதேவ். படத்தின் மிக பெரிய பலம். படத்திற்கான டோனை அற்புதமாக செட் செய்து சந்து, பொந்துகளில் பாய்ந்து ஒடுகிறது. இரவு காட்சிகளில் மிளிர்கிறது. சண்டைக் காட்சிகளில் நன்றாக சுழன்றுள்ளது.
எடிட்டிங்:
ராம் சுதர்ஸன். இந்த படத்தையும் 150 நிமிடங்கள் தியட்டரில் உட்கார்ந்து பார்க்க முடிகிறதென்றால் இவர் தான் காரணம். கொடுத்த பிட்டு பிட்டு காட்சி காட்சிகளை கொண்டு இவரே படத்தை கொண்டு வந்திருப்பார் போல. முதல் பாதியில் கதை நகர மாட்டேன் என்கிற போது, இவரது எடிட்டிங் தான் படத்தை நகர்த்துகிறது.
கதை.தி.கதை,இயக்கம்:
சுப்ரமணிய சிவா & அமீர். என்ன தான் சிவா இயக்கி இருந்தாலும் எனக்கென்னமோ இது அமீரின் படமாக தான் தெரிந்தது. அமீர் தான் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை எழுதியுள்ளார். இப்படி நான் கருதினாலும் கதை என்ற ஒன்று இல்லாமல் இருப்பது போன்று தான் தோன்றியது. படத்தை எவ்வளவோ விறுவிறுப்பாக நகர்த்த வாய்ப்பிருந்தும் படம் எங்கும் செல்லாமல் பாறையை போல அங்கேயே நிற்கிறது. இடைவேளையின் போது கதை எப்பாதையில் செல்கிறது என்று தெரியாமல் படம் பார்க்கும் அனைவரும் விழிக்கின்றனர். இடைவேளைக்கு பிறகாவது நகரும் எனப் பார்த்தால் பின்னாடி நகர்ந்து யோகியின் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள்.
வசனங்கள் ஆங்காங்கே பளிச். காட்சிகளும் ஆங்காங்கே பளிச். ஆனால் படம் டல்லடிப்பதால் அவையாவும் அடிபட்டு போகின்றது. கிளைமாக்ஸ் அமீர் தான் யோசித்தாரா என்பது எனக்கு புரியவில்லை. அவ்வளவு மோசமாக இருந்தது. படத்தை எடுப்பதற்கான எடுத்த சிரத்தையை திரைக்கதையிலும் காண்பித்திருந்தால் யோகி தப்பித்திருப்பான்.
யோகி - பொறுமையை சோதிப்பவன்.
டிஸ்கி: இந்த படத்தின் முன்பதிவு படுமோசமாக இருந்தது. என்னடா மக்கள் அமீர் போன்றதோரு கலைஞனுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை என தோன்றியது. ஆனால் படம் முற்றிலும் என்னை ஏமாற்றிவிட்டது.
ஞாயிறு, 22 நவம்பர், 2009
தீபாவளி கொண்டாட்டம்
நம்ம வானவில் கார்த்திக் சிறிது காலத்துக்கு முன் என்னை தீபாவளி சம்பந்தமான டேக்-கில் கோர்த்துவிட்டார். நான் என்னோட சோம்பேறிதனத்துனால கொஞ்சம் லேட்டா பண்றேன்...
கா.கியும், சாமியும் கோவிச்சிக்க வேணாம். நீங்க ரெண்டு பேர் கொடுத்த ‘டேக்’கையும் இந்த மாசத்துக்குள்ள முடிச்சிடறேன். உங்களைப் பற்றி சிறு குறிப்பு? என்னங்க ’Tell me about yourself'-னு இண்டர்வியூ-ல கேக்குற மாறி இருக்கு. இப்படி கேட்டா 5 நிமிஷம் விடாம பேசுவேன். ஆனா எழுத தான் வர மாட்டேங்குது. இப்போதைக்கு ஒரு நல்ல வேலை-ல இருக்கேன். சந்தோஷமாவும் இருக்கேன். ஏதாவது உருப்படியா பண்ணனும்-னு மட்டும் மைண்ட் சொல்லிட்டே இருக்கு. ஆனா என்ன பண்றது-னு தான் தெரியல. பார்ப்போம். தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம்? நான் கொஞ்சம் பயந்தாங்கொள்ளி அப்டிங்குறதுனால இதுவரைக்கும் எல்லாமே சேப்டி தீபாவளியாவே அமைஞ்சு போச்சு. 2007-ம் ஆண்டு தீபாவளிய மறக்க முடியாதது அப்டி-னு சொல்லலாம். அந்த தீபாவளிக்கு தான் நான் எங்க வீட்ல இல்ல. பெங்களூர்-ல இருந்து நைட் 10 மணிக்கு தான் வந்தேன். ஊரே அடங்கி போய் இருந்துது. அப்பவும் சாப்பாட்ட மட்டும் ஒரு கட்டு கட்டுனேன். 2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள்? சென்னைலதான்.. தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள்? தீபாவளி அன்னிக்கு இரவு வானத்த பாத்துட்டே போய்ட்டு இருப்பேன். ஏன்னா அவ்ளோ கலர் கலரா வான வேடிக்கைகள் வந்துடுச்சி. அத பார்த்தாலே ரொம்ப சந்தோஷமா இருக்கும். வெடிகள் இப்ப குறஞ்சு இருக்கு. அதுவும் மகிழ்ச்சி தர ஒரு விஷயம் தான். புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ? அம்மா, அப்பா திட்ட போறாங்களே அப்டி-னு சொல்லிட்டு தீபாவளிக்கு முந்துன நாள் போய் ஒரு ஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன். ஸ்பென்சர்-ல ஏவியேட்டர் அப்டி-னு ஒரு கடை-ல. அங்க டிசைனும் நல்லா இருக்கு. விலையும் ஒ.கேவா இருக்கு. உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள்? அல்லது வாங்கினீர்கள்? எல்லாம் அம்மா தான் செஞ்சாங்க. அதிரசம், முறுக்கு, சோமாசு, வடை, பணியாரம், சுசியம் அப்புறம் தோசை, கோழிக்கறி கொழம்பு. அவ்ளோ தான். :) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை)? தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா? டி.வி-ய எல்லாம் இப்ப பாக்குறது இல்ல. முன்னயெல்லாம் நிகழ்ச்சி நேரத்த குறிச்சு வச்சி ப்ளான் பண்ணி பாத்துட்டு இருந்தேன். படத்துக்கு போறதோட தீபாவளி கொண்டாட்டம் முடியுது. இந்த வருஷம் ஆதவன் பாத்தேன். இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள்? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம்? நான் எதுவும் நானாக சென்று செய்தது இல்லை. இந்த வருடமும், 2007-லும் நான் ஆபிஸிலிருந்து வெளியே வரும் போது சில குழந்தைகள் இல்லத்திலிருந்து கேட்டார்கள். நானும் 100 மற்றும் 50 ரூபாய் கொடுத்தேன். கேட்டவர்கள் இளைஞர்கள் தான். நான் ஏன் அப்படி இல்லை என எனக்கு தோன்றியது. ஆனா நெறைய செய்யணும்-னு மட்டும் அடிக்கடி தோணும். பண்ணனும். அந்த ரசீதை எங்கோ வைத்துவிட்டேன். அதனால் பெயர் தெரியவில்லை. சென்னையில் இருக்கும் ஒன்று தான். கண்டுபிடித்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
செவ்வாய், 3 நவம்பர், 2009
மக்கள் குரல் - நவம்பர் 3, 2009
திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...
ஞாயிறு, 1 நவம்பர், 2009
ஒரு ரூபாயில் விளையும் பயன்
தி.மு.க அரசு தன்னுடைய சாதனையாக பறைசாற்றிக் கொள்ளும் ஒரு ரூபாய் அரிசி திட்டம் தமிழகத்தை வெகு சீக்கிரமே சோதனையில் தான் கொண்டு சென்று விடும் போலிருக்கிறது. ஏற்கனவே நியாய விலை கடையில் கிடைக்கும் அரிசியின் தரத்தின் பெயரில் பல குற்றசாட்டுக்கள் உள்ளன. ஆனாலும் மக்கள் அதை வாங்கி உண்பது தங்களுடைய வறுமையின் காரணமாகவே என்று நம்பியிருந்த நான், அந்த காரணத்தை குழி தோண்டி புதைக்கும் படி ஆகிவிட்டது.
சென்ற வாரம் எனது அலுவலக நண்பரோடு பேசி கொண்டிருந்த போது அவரது ஜவுளி கடை வைத்திருக்கும் அவரது நண்பரைப் பற்றி சொன்னார். அதாவது அவர் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும், அதற்கு ஒரு யோசனை சொல்லும் மாறு அவரின் நண்பரிடம் கேட்ட போது, உடனே மறுத்து இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம்:
இப்பயெல்லாம் முன்ன மாதிரி இல்ல. வேலைக்கே ஆள் கிடைக்க மாட்டேங்குது. அப்படியே கிடச்சாலும் யாரும் ஒழுங்கா வேலை செய்யுறது இல்ல. ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைக்கிறதுனால சாப்பாட்டுக்கு பிரச்சன இல்ல. அதனால யாருக்கும் வேலைக்கு போய் சம்பாதிக்கணும் அப்டிங்குற எண்ணமே இல்லாம போச்சு. ஏதாவது பண்ணனும்-னு நினச்சினா... நீ, அப்புறம் உன்னோட குடும்பத்த சேர்ந்தவங்க பாத்துக்க முடியுற மாறியான தொழில் மட்டும் பண்ணு
இதுல நிறைய உண்மை இருக்குறதா தான் நான் நினைக்கிறேன். நாம உழைக்கிறதே சாப்பாடுக்காக தான். அது நமக்கு கிட்டதிட்ட இலவசமா கிடைக்கும் போது யார் போய் கஷ்டப்பட்டு உழைக்க போறாங்க
.நம்ம அரசு ஏதோ சாதிச்சிட்ட மாதிரி ஒரு ரூபாய்க்கு அரிசி தர்றோம்-னு பெருசா சொல்லிக்கிறாங்க. ஆனா அதுல இருக்குற பாதகங்களா பாக்காம விட்டுவிட்டு இருக்காங்க. இதோட உடனடி பாதிப்பு இப்போ தெரியலனாலும், இப்படியே போச்சுன்னா, இன்னும் சில ஆண்டுகள்-ல நிச்சயமா தொழில் துறை-ல பாதிப்பு இருக்கும்.
ஏற்கனவே விவசாயம் நம்ம நாட்டுல நசிஞ்சு போயிட்டே இருக்கு. எனக்கு தெரிந்த யாருமே இப்போ விவசாயம் பாக்கல. நிலத்த வச்சி இருந்தவங்களும் நிலத்த வித்துட்டு வேற வேலைய பாக்க போயிட்டாங்க. விவசாயம் பாக்குறது அப்டிங்குறதே ஒரு கேவலமான விஷயம் மாறி இப்போ ஆயிடுச்சி. ஆனா இத சரி பண்றதுக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எந்த அரசாங்கமும் எடுக்கல. இப்டியே போச்சுனா, அரசுக்கு நியாய விலை கடைல கொடுக்கவே அரிசி இல்லாம
போனாலும் போகலாம்.இலவசங்கள் மக்கள வெறும் சோம்பேறிகளாக தான் ஆக்கும் என்ற எளிய உண்மையை எல்லாம் அறிந்த நமது முதல்வரும், அவரது கட்டியும் எப்போது புரிந்து கொள்வார்கள் என தெரியவில்லை.
