திரு.கருணாநிதி: “ஒரு எம்.எல்.ஏ., அவரது இடத்தில் அமைக்கப்பட்ட பஸ் நிலையத்திற்கு எனது பெற்றோர் பெயரை வைக்க நினைத்தார். அதைக் கிண்டல் செய்யும் ஜெயலலிதாவை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”
மக்கள்: ஜெயலலிதா எல்லாரும் தன் பெயரையே வைக்கணும்-னு நினைப்பாரு. நீங்க உங்க குடும்பத்துல இருக்குற யாரோட பெயராவது இருந்தா போதும்-னு பெருந்தன்மையா நினப்பீங்க. ரெண்டு பேரையுமே நாங்க நல்லா புரிஞ்சிக்கிட்டு இருக்கோம் தலைவரே...
***************************************************************************
திரு.மன்மோகன் சிங்: “இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் , தீவிரவாதத் தாக்குதல்களுக்கு எளிதாக இலக்காகி விடுகிறது.”
மக்கள்: ஒண்ணும் புரியலையே!!!!! இவரே அவங்களுக்கு எடுத்து கொடுக்குறாப்புல இருக்கு...
****************************************************************************
திரு.தங்கபாலு: ”இலங்கை சென்ற தமிழக எம்.பிக்கள் ராஜபக்ஷேவிடமோ அல்லது அங்குள்ள எந்த தலைவர்களிடமோ எந்தப் பரிசுப் பொருட்களையும் பெறவில்லை!”
மக்கள்: இது வேறயா??? ஆனா ’இல்ல, இல்ல’ அப்டிங்குற போதெல்லாம் ’இருக்கு, இருக்கு’ அப்டின்னு காதுல விழுகுதே!!!’
*****************************************************************************
திரு.மு.க.ஸ்டாலின்: “வயதான காலத்தில் பெற்றோரிடம் பிள்ளைகள் அன்பு காட்ட வேண்டும். அவர்களுக்குப் பாதுக்காப்பாக இருக்க வேண்டும்!”
மக்கள்: நீங்க தான் அதுக்கு வாழும் உதாரணமா திகழ்றீங்களே!!!!
******************************************************************************
திரு.கருணாநிதி: “இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கிறது”
மக்கள்: தமிழ் மக்கள் எல்லாரும் செத்த பிறகு எங்க இருந்து சண்ட போடுறது. சண்டை நின்ற புண்ணியம் உங்களை சேருமைய்யா...
******************************************************************************
செல்வி.ஜெயலலிதா: “ஒபாமா எதையும் சாதிப்பதற்கு முன்பே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுவிட்டது”
மக்கள்: என்ன அ.தி.மு.க தொண்டர்கள் யாரும், ‘உலக அளவில் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த அம்மாவிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்’ அப்டின்னு தீர்மானமும் நிறைவேற்றல, கோரிக்கையும் வைக்கல.. ஒரே மர்மமா இருக்கே!!!
Leia Mais…